ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைத்தியம்?
Page 1 of 1
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைத்தியம்?
நன்றி கிருமி
திருச்சி: “”சிறையில், வயது முதிர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் படும் இன்னல்களை எல்லாம் பார்க்கும்போது, இந்த இன்னல்களை, வர இருக்கும் காலத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் சந்திப்பர்” என, கொலை முயற்சி வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்த, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
என்னய்யா இது? வயது முதிர்ந்தா தப்பு செஞ்சதெல்லாம் சரியாயிடுமா? கருணாநிதிய உள்ள வச்சதுக்கும் இப்படித்தான் அழுதாங்க. சுத்த பிக்காலித்தனமா இல்ல இருக்கு. பிராயத்துல தப்பெல்லாம் செஞ்சிட்டு அறுவது வயசுல மாட்டுனா வுட்ரணுமா? சொல்லப் போனா இந்த வயசு வரைக்கும் தப்பு செஞ்சதுக்கு, இந்த வயசு முதிர்ச்சிலயும் தப்பு செய்றியான்னு இரட்டை தண்டனை இல்ல கொடுக்கணும்.
ஸ்ரீபெரும்புதூர், செப் 18: அனுமதியின்றி ஆட்டோ பந்தயம் நடத்த முயன்ற 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புரட்சி பாரதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் அட்டூழியங்களும் கட்டப் பஞ்சாயத்துகளும் தினமும் அரங்கேறிக் கொண்டுள்ளன. இவர்களை கண்டிக்க எவரும் இல்லாமல் அரசு செலுத்தி வருகின்றனர். இவர்களின் பெரும் பலமே இவர்களின் ஜாதியும் இவர்களின் பின் நிற்கும் கிறித்தவ அமைப்புகளும் தான். அதை வைத்தே அனைவரையும் மிரட்டி வருகின்றனர். இதுவும் அது போன்ற ஒரு கும்பலே.
புதுதில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் ஆமதாபாதுக்கு அதிமுக பிரதிநிதிகளை அனுப்பியது தவறானது என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்ப அதிமுக முடிவுசெய்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை. அது தவறான முடிவு என நாங்கள் நினைக்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.க்களையா அனுப்பினார்? அவர் அனுப்பியது அ.தி.மு.க ஆட்களைத் தானே? இதற்கு எதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உடன்பாடு தேவைப்படும் ஜெயலலிதாவுக்கு? இவர்கள் சுட்டிக் காட்டுவதெல்லாம் தவறாகுமா? போலி மதச்சார்பின்மை வாதிகள்.
ஈரோடு, செப்.18: காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது தொடர்பாக மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும், எனினும் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மனதார வரவேற்கிறேன் என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு பைத்தியம் பிடித்தால் காங்கிரசுடன் கூட்டு வைப்பார். இளங்கோவனுக்கு பைத்தியம் பிடித்திருப்பதால் தே.மு.தி.க கூட்டணியை எதிர்பார்க்கிறார்.
சென்னை, செப்.18: மத நல்லிணக்கத்திற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்தாலும், எங்களால் கடந்த கால சரித்திரத்தை மறந்துவிடமுடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
ஆமா ஆமா! அது மாதிரிதான் கடந்த கால வரலாறை தமிழக மக்களும் மறக்க மாட்டாங்க. இந்துன்னா திருடன்னு சொன்னீரே, இந்து ஓட்டுக்களால பிச்சை கிடைச்சு மாதிரி பதவிக்கு வந்துட்டு இந்துக்களை திருடன்னு சொன்னீரே, அதெல்லாம் நினைவுக்கு வருது கருணாநிதியாரே!
நன்றி கிருமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum