பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்!!
Page 1 of 1
பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்!!
நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் பீட்டர் ஓ மெரா கூறியதாவது: வெளியே 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறைந்தால், அடுத்த 10 நிமிடங்களில் வெப்பம் இரு மடங்காக உயரும்.
கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம்.
நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை, செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு. கடந்த ஓராண்டில் மட்டும் காருக்குள் வெப்பத்தில் சிக்கிய 1,500 குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டனர்.
வெப்பமான காருக்குள் சிக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக உடலில் நீர் வற்றி போய் மூளை பாதிக்கப்படும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு விரைவாக சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சீர்கெடும்.
நீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது.
இதை தவிர்க்க சூடேறிய காருக்குள் இருந்து வண்டி நின்றதும் குழந்தைகளை உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்படும் கார் கதவுகளை பூட்டி குழந்தைகள் ஏறி அமராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பீட்டர் ஓ மெரா தெரிவித்தார்.
நன்றி cnn
Similar topics
» இதயம் வலுவாக இருந்தால் மறதிக்கு மருந்து தேவையில்லை !!
» குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் பெண்கள்
» கண்ணிலிருந்து விழும் கற்கள் அமானுஷ்ய குழந்தை
» குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் பெண்கள்
» கண்ணிலிருந்து விழும் கற்கள் அமானுஷ்ய குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum