குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?
Page 1 of 1
குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?
ஒரு குறிப்பிட்ட அமைச்சரைக் கூப்பிட்டு அச்சமயம் அங்கு அழைக்கப்பட்டிருந்த தொழில் நிபுணர்களிடம் தொழில் நுணுக்கம் பற்றிய சில விவரங்களை எடுத்துச் சொல்லச் சொன்னார் சர்ச்சில்.
அந்த அமைச்சரும் வழவழ-கொழ கொழவென்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். சர்ச்சிலுக்கு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.
அமைச்சர் பேச்சை முடித்தவுடனே சர்ச்சில் அவரைப் பார்த்து அரசியலின் அடிப்படை விதியை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
அமைச்சர், சர்ச்சில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் விழித்தார்.
நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? என்று கேட்டார் சர்ச்சில்.
புரிய வில்லை என்றார் அமைச்சர்..
நீங்கள் விளக்கவந்த விஷயம் உங்களுக்கே புரியாவிட்டாலும், எவ்வளவு குழப்பமாக அதை எடுத்துக் சொல்ல முடியுமோ அப்படி எடுத்துச் சொல்வது தான் ஓர் அரசியல்வாதியின் இலட்சணம் என்று சொன்னார் சர்ச்சில்.
விஜயகாந்த் அவர்களுக்கு முழுமையான அரசியல் தெரியாது என்று தமிழகமக்களும் நன்று அறிவார். ஆனால் குறைந்தபட்ச தகுதியான, ஏதாவது அறிக்கைகள், தேரியாவிட்டாலும் பேசிக்குழப்பக்கூடிய வேலையாவது செய்யலாம். அதற்குகூட வாய்திறக்காமல் மௌனம் காத்துக்கொண்டு அம்மாவின் உண்மை விசுவாசி என்று நிறுபித்துவிட்டார்.
தற்போதுதான் ஞானம் வந்ததுபோல் பஸ் கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு நான் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்திடம், ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்று கேட்டதற்க்கு உடல்நிலை சரியில்லைஎன்று பதில் அளித்துள்ளார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் என்பதை அடிக்கடி ஞாபகம் படுத்த வேண்டும் போல.
இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
எழுதியவர் சௌந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum