வேல்முருகன் கையில் ஒரு பண்டம்! ராமதாசுக்கு தையில் ஒரு கண்டம்!!
Page 1 of 1
வேல்முருகன் கையில் ஒரு பண்டம்! ராமதாசுக்கு தையில் ஒரு கண்டம்!!
பா.ம.க.-வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், இனியும் பா.ம.க.-வில் தொடரும் திட்டம் இல்லை என்பதை தெரிவித்துள்ளதுடன், வரும் தமிழ் தை மாதத்தில் (ஜனவரியில்) புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
வேல்முருகனை மீண்டும் பா.ம.க.-வுக்குள் இழுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை அடுத்து, இந்த அறிவிப்பு அவரிடமிருந்து வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் வேல்முருகன், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து செயற்படுவார் என்று வந்த செய்திகளுக்கும் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாம் தமிழர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கொள்ளுமாறு வேல்முருகனை சீமான் கேட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
பா.ம.க.-வில் இருந்து ஏற்கனவே விலக்கப்பட்ட பலருடன் இணைந்து தனது புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள வேல்முருகன், “பா.ம.க.-வில் இருந்து இனி என் காலில் விழுந்து கூப்பிட்டாலும் அவர்களிடம் செல்லப் போவதில்லை” என்கிறார். இந்த கூற்று அவர் என்ன விதமான பாதையில் போகத் திட்டமிடுகிறார் என்பதை ஓரளவுக்கு புரிய வைக்கிறது.
நாம் தமிழர் போன்ற அமைப்பாக இல்லாமல், ஆக்டிவ் அரசியலில் ஈடுபடும் ஒரு கட்சியை பா.ம.க.-வுக்கு எதிராக உருவாக்கவே இவர் விரும்புகிறார் என்பதை ஊகிக்கலாம். ஒரு வகையில் சொன்னால், இன்றைய சூழ்நிலையில் அப்படியொரு முயற்சி தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக சுலபமாக ஹிட் ஆகும்.
ஆனால், அதற்காக வரும் ஜனவரி வரை கால அவகாசம் கொடுக்கிறார் பாருங்கள், அங்கேதான் சறுக்க வைத்து விடும்.
ஒரு குறிப்பிட்ட கட்சியின் வோட்-பேங்கை குறிவைத்து தொடங்கப்படும் கட்சி என்றால், அந்தக் கட்சிக்குள் ‘புரட்சி’ செய்யும் ஸ்டைலில் வெளியே வந்து உடனடியாக தொடங்கப்பட வேண்டும். புரட்சியை ஆறிப்போக வைத்துவிட, சில வாரங்களே போதுமானது.
நன்றி விறுவிறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum