உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...

Go down

பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...  Empty பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...

Post by nandavanam Thu Nov 10, 2011 4:06 am

பதுங்கிவிட்ட விஜயகாந்த்... பரிதவிப்பில் மக்கள்...  Vijayakanth

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்பாக செயல் பட்ட விஜயகாந்த் வெற்றிவாகை சூடிய கையோடு தொலைந்து போனவர்தான் இதுவரை காணவில்லை.

தமிழக சட்டமன்றத்தில் மிகவும் பொறுப்புமிக்க பதவியான எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்து கிடைத்தும் அதற்கான பொறுப்புடன் விஜயகாந்த அவர்கள் நடந்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. பட்ஜெட் கூட்டத்திலும் அதன் பிறகு நடந்த விவாதங்களிலும் வாயை திறக்காமல் இருந்த இவர் அடுத்து வெளிவந்தது உள்ளாட்சி தேர்தலில்தான்.

எவ்வளவு பம்பியும் கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிட்டப்பிறகு உள்ளாட்சி மன்றத்தில் தனித்துப்போட்டியிட்டு ஏதோ அவரால் முடிந்த இடத்தை பிடித்தார். கூட்டணியில் இல்லாத இந்த தருணத்தில் கூட விஜயகாந்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்புகிறது.

தமிழகமெங்கும் பருவ மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் 60 க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழப்பும் ஏற்ப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வம்பு வழக்கு என்று நீதிமன்றங்களை சந்தித்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் தான் மக்களின் நினைப்பு வருகிறது அவருக்கு... எதிர்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் விஜயகாந்த் என்னவானார்.

கடந்த ஒரு வாரமாக செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விஜயகாந்த் பற்றி செய்தி ஏதாவது வருகிறதா என்று ஆவலும் பார்த்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப்பற்றிய செய்திகள் ஏதும் இல்லை.

அவரது சொந்த மாவட்டமான மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் ‌மழைச் சேதமும், உயிரி‌ழப்பும் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்கள் பலத்த மழைச் சேதத்தை சந்தித்திருக்கிறது. அந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட இவர் வெளியில் வரவில்லையென்றால் மிகவும் வெட்ககேடு.

எதிரிகட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து நிவாரண பணிகள் நடக்கிறதா என்று கண்டறிந்தார். தற்போது கூட சென்னையில் பல இடங்களில் சுற்றிபார்த்து ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் விஜயகாந்த்.

தமிழகத்தின் ஒரு ‌பெரிய பொறுப்பு வகிக்கும் விஜயகாந்த் இது ‌போன்று மெத்தன போக்கை கடைபிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. ஒரு வேளை அம்மாவின் கைப்பாவையாக மாறிவிட்டாறோ என்ற சந்தேகம்தான் எழுகிறது.

பாருங்கள் தமிழகத்திற்கு வந்த சோதனை...!

எழுதியவர் சௌந்தர்


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum