அதிரவைக்கும் ஆட்டோ கட்டணம்!
Page 1 of 1
அதிரவைக்கும் ஆட்டோ கட்டணம்!
சென்னை நகரில் ஆட்டோ கட்டண நிர்ணயம், நீண்ட காலமாகத் தீர்க்கவே முடியாத ஒரு பிரச்னையாக இருந்துவருகிறது! அவசரத் தேவைகளுக்காக நடுத்தட்டு மக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் கை கொடுக்கும் ஆட்டோ, கட்டண விவகாரத்தில் வழிப்பறிக் கொள்ளையர் போலவே செயல்படுகிறது.
இப்போது பல ஆட்டோக்களில் மினிமம் என்று 50 வசூல் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி? அதுவும் வெளியூரில் இருந்து ரயில் மற்றும் பஸ்ஸில் வரும் அப்பாவிப் பயணிகளிடம் ஆட்டோக்காரர்கள் கேட்கும் தொகை (மீட்டர் கட்டணத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம்) இன்னொரு வயிற்றெரிச்சல் விவகாரம்! ஆட்டோவைத் தவிர்க்க முடியாததால், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டுப் பயணம் செய்யவேண்டிய சூழல்.
பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்றவை ஆட்டோவுக்கும் பொருந்தும் என்றாலும்... ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குச் செல்ல நியாயமான கட்டணத்தை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, பொது மக்கள் பாதிக்காத அளவுக்கு கட்டணங்களை அரசு நிர்ணயித்து, பொதுமக்களுக்கும் இதைத் தெரிவிக்க வேண்டும்.
ஆட்டோவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அவை சரியாக இயங்க வேண்டும். கேபிள் டி.வி-யை நடைமுறைக்குக் கொண்டுவந்தது போன்று, ஆட்டோ விவகாரத்திலும் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.
இப்போது பல ஆட்டோக்களில் மினிமம் என்று 50 வசூல் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி? அதுவும் வெளியூரில் இருந்து ரயில் மற்றும் பஸ்ஸில் வரும் அப்பாவிப் பயணிகளிடம் ஆட்டோக்காரர்கள் கேட்கும் தொகை (மீட்டர் கட்டணத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம்) இன்னொரு வயிற்றெரிச்சல் விவகாரம்! ஆட்டோவைத் தவிர்க்க முடியாததால், அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டுப் பயணம் செய்யவேண்டிய சூழல்.
பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்றவை ஆட்டோவுக்கும் பொருந்தும் என்றாலும்... ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குச் செல்ல நியாயமான கட்டணத்தை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, பொது மக்கள் பாதிக்காத அளவுக்கு கட்டணங்களை அரசு நிர்ணயித்து, பொதுமக்களுக்கும் இதைத் தெரிவிக்க வேண்டும்.
ஆட்டோவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அவை சரியாக இயங்க வேண்டும். கேபிள் டி.வி-யை நடைமுறைக்குக் கொண்டுவந்தது போன்று, ஆட்டோ விவகாரத்திலும் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.
எழுதியவர் - எஸ்.ராமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum