உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மீண்டும் சிறை கனிமொழிக்கு.... தோல்வியில் கலைஞரின் ராஜதந்திரம்..

Go down

மீண்டும் சிறை கனிமொழிக்கு.... தோல்வியில் கலைஞரின் ராஜதந்திரம்.. Empty மீண்டும் சிறை கனிமொழிக்கு.... தோல்வியில் கலைஞரின் ராஜதந்திரம்..

Post by nandavanam Fri Nov 04, 2011 3:51 am

மீண்டும் சிறை கனிமொழிக்கு.... தோல்வியில் கலைஞரின் ராஜதந்திரம்.. Kanimozhi+hot

ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின் கிடைத்து விடுமா என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பில் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.

கடந்த 24 ம் தேதி ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது . இதில் சி.பி.ஐ., தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதனால் அவரை நீதிபதி ஜாமினில் விடுதலை செய்வார் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக தீபாவளி கொண்டாடும் நேரத்தில் அவர் வெளியே வருவது கூடுதல் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.

தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் எம்.பி.,கனிமொழிக்கும் தொடர்பு இருந்தது சி.பி.ஐ., மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாயம் பெற்றதற்காக ஸ்வான் என்ற நிறுவனத்தினர் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கொடுத்தனர். இது கடனாக பெறப்பட்டது என்று கனி மொழி சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டை ஏற்று ஆதாராம் இருப்பதாக உணவர்வதாகவும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியிருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி விட்டால் ஜாமின் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி இன்று ஜாமின் கிடைக்குமா என்பது தெரிந்து விடும் .

கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசீப்பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி மற்றும் ராஜீவ்அகர்வால் ஆகியோர் ஜாமின் கேட்டுள்ளனர்.

மனு விசாரணை வருவதையொட்டி இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அனைத்துதரப்பிலும்ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக ஜாமின் மறுக்கப்பட்டு இந்த விசாரணை வரும் 11 -ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


இரண்டு நாட்கள் கலைஞர் டில்லியில் முகாமிட்டு செய்த ஏற்பாடுகள் ஏதும் எடுபடுவதாக தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் காலம் முழுக்க ஜெயில்தான் இருக்கவேண்டும். அரசியவாதிகளுக்கு ஆதரவாக இல்லாதல் நீதிமன்றங்களின் செயல்பாட்டு ஒரு சபாஷ் போடடே ஆகவேண்டும்.


இனி என்னவாகும் பொருத்திருந்து பார்ப்போம்.

எழுதியவர் சௌந்தர்

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum