தமிழ் மீது ஏன் இந்தக் 'கொல வெறி'
Page 1 of 1
தமிழ் மீது ஏன் இந்தக் 'கொல வெறி'
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் கிடையாது. இப்படி இருக்கும் தமிழ்நாட்டில், கொல வெறி பாடலை போல் தமிழையே கொலை செய்து விட்டது தனியார் நிறுவனம் ஒன்று. (படத்தில் அந்த அலங்கோலத்தை பாருங்கள்)
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இருந்து இன்று காலை அரசு பேருந்தில் பணிக்கு வந்துள்ளார் தமிழ் ஆர்வலர் ஒருவர். தியாகராயர் நகரில் இறங்கிய அந்த பயணி, எதிரே சென்ற அரசு பேருந்தில் இருந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது செல்போனில் அந்த விளம்பரத்தை படம் எடுத்து நமது இணையதள முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அப்படி என்னதான் விளம்பரம் என்று பார்த்தால்... பெரிய கொட்டை எழுத்துக்களில் ''கொலை வெறி விலைகள்'' என்ற தலைப்பில் அரசு பேருந்தின் பின்னால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எல்லாமே, எப்போதும்,, எல்லோருக்கும் 'உட்பெக்கர் ஃபர்னிச்சர்' என்றும் எல்லா விலையும் 14.5% VAT-ம் உள்ளடங்கும். ''முளு வாரண்டி''யும் உண்டு. இதுதான் விளம்பரம்.
முளு என்பதற்கு தமிழில் அர்த்தமே கிடையாது. முழு என்பதற்கு பதிலாக முளு என்று விளம்பரத்தை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் தமிழை எப்படியெல்லாம் கொல வெறியோடு நடத்துறாங்க என்று வேதனைப்பட்டனர்.
இப்படி பல விளம்பரத்தில் தமிழை கொல வெறிப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் ஏராளமான உள்ளன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அனைத்து நிறுவனம், கடைகளில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை பல நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டது.
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழிக்கா இந்த கதி என்று ஆதங்கப்படுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
அப்படி என்னதான் விளம்பரம் என்று பார்த்தால்... பெரிய கொட்டை எழுத்துக்களில் ''கொலை வெறி விலைகள்'' என்ற தலைப்பில் அரசு பேருந்தின் பின்னால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
எல்லாமே, எப்போதும்,, எல்லோருக்கும் 'உட்பெக்கர் ஃபர்னிச்சர்' என்றும் எல்லா விலையும் 14.5% VAT-ம் உள்ளடங்கும். ''முளு வாரண்டி''யும் உண்டு. இதுதான் விளம்பரம்.
முளு என்பதற்கு தமிழில் அர்த்தமே கிடையாது. முழு என்பதற்கு பதிலாக முளு என்று விளம்பரத்தை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் தமிழை எப்படியெல்லாம் கொல வெறியோடு நடத்துறாங்க என்று வேதனைப்பட்டனர்.
இப்படி பல விளம்பரத்தில் தமிழை கொல வெறிப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் ஏராளமான உள்ளன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அனைத்து நிறுவனம், கடைகளில் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை பல நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டது.
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழிக்கா இந்த கதி என்று ஆதங்கப்படுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி வெப்துனியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum