உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என்(ன) குடும்பம் இது..?

Go down

என்(ன) குடும்பம் இது..?  Empty என்(ன) குடும்பம் இது..?

Post by nandavanam Mon Dec 05, 2011 4:25 am

என்(ன) குடும்பம் இது..?  Cart4
சிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன்மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்..

சிறையிலிருந்து “ஜாமீனில் “ வெளிவந்த பிறகு...அப்பாவே “ஏர்போர்ட் “ சென்று வரவேற்றதை புரிந்து கொள்ள முடியவில்லையே---

அரசியலில் இதெல்லாம் சஹஜமப்பா--என்பதா?..
தாரை தப்பட்டை--பாண்டுவாத்யங்கள்---
ஒயிலாட்டம்..கரகாட்டம்---”சிறைப்பறவையே--சீறும்
கடலலையே---அடுத்த முதல்வரே...
என தடபுடலான..”பிளக்ஸ் ..போர்டுகளுடன்”--வரவேற்பு..

அப்பாவும் மகளும் அருகருகே காரில் அமர்ந்திருக்கும் “போஸுடன் “பத்திரிக்கையில் படங்கள்..

இவையெல்லாம் என்ன கொலை பாதகங்களா?--
வரவேற்க போகக்கூடாதா?--
பத்திரிக்கையில் படங்களே வரக்கூடாதா?---

-சரி..இப்படி கேள்வி கேட்பது தவறானவையா?--

நம் வீட்டில் வெளியூரிலிருந்து வரும் நம் குடும்பத்தினரை கூப்பிட்டு வர..ரயில் நிலையம்--ஏர்போர்ட்டுக்கு நாம் செல்வோம்.இது வரவேற்க அல்ல..அழைத்து வர...ஒருவேளை நாம் இல்லாவிட்டால்..ஓட்டுனரை அனுப்புவோம் வண்டியுடன்.அதுவும் இயலாவிட்டால் அவர்களே வாடகை வண்டியில் வீடு வந்து சேர்வர்..
அதுதானே வழக்கம்..

கருணாநிதி குடும்பம் வித்தியாசமானது...தகப்பன்..---மகனை--தம்பி என்று அழைப்பார்...

அப்பனை..மகன்கள்..மகள்..பார்க்கும் போதெல்லாம் மாலை--சால்வை அணிவித்து வரவேற்பர்..

பேரக்குழந்தைக்கு..தாத்தாவை காட்டுவதெல்லாம் டி.வி.க்கள் மூலமே நடைபெரும்..

ஒருவேளை கருணாநிதி முதலமைச்சராகவும் கனிமொழி மத்திய அமைச்சராகவும் இருந்திருந்தால் வரவேற்க செல்வது “பதவி நிமித்தமாக “ என்று சொல்லலாம்.
இது “உறவு நிமித்தமாக” என்றால் --நம் நாட்டில் எந்தக் குடும்பத்தில் இப்படி நடக்கிறது...கிடையாதே..

ராகுல் காந்திகூட சோனியாவை வரவேற்க ஏற்போர்ட் போவதில்லையே..

விஜயகாந்தை வரவேற்க பிரேமலதா செல்வதில்லயே..

”ஜெ”யை வரவேற்க “சசி “ செல்வதில்லையே..(எப்போதும் ஒருவரை
விட்டு ஒருவர் பிரிவதில்லை எனபது வேறு விஷயம் )..


பணத்தாலே--பதவியாலே மட்டும் கட்டுண்டுள்ள குடும்பத்தில்
..”வரவேற்புக்கள் “நிகழ்த்தப்படாவிட்டால்..உறவுகள் “மரவுரி “தரிக்கும்.--
ராசாத்திக்கள்--ராட்சசிக்களாக மாறுவர்..
அம்மாக்கள் அதிருப்தி அடைவர்...
சகோதர சகோதரிகள்..சதுராடுவர்---

அப்படி ஒரு விஷப் பரிட்சை நடத்தும் நிலையில் கருணாநிதி இன்று இல்லை...

தடபுடல் வரவேற்பு --கருணாநிதியின் இடர்களை சரிசெய்யவே..

இது என்ன குடும்பம் என்கிறீர்களா?--இதுதான் அவர் குடும்பம்..


எழுதியவர் எஸ்.ஆர்.சேகர்


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum