'திமுகா'வின் அடுத்த மூவ் ! சரியா? தவறா?
Page 1 of 1
'திமுகா'வின் அடுத்த மூவ் ! சரியா? தவறா?
தமிழ் நாட்டில் தற்போது உயர்த்தப்பட்ட பால் விலை, பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே எதிர்க்கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டார். மற்றொரு எதிர்க்கட்சி எந்த விதமான போராட்டம் நடத்தும் என பெரும்பாலோனோர் எதிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திமுக கட்சியின் பொதுச் செயலார் அன்பழகன் அவர்கள் வெளியிட்ட ஒரு அறிக்கையில் டிசம்பர் ஒன்றாம் தேதி அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றார்.
மேலும் தெருமுனை பிரச்சாரங்கள் டிசம்பர் ஐந்து முதல் பன்னிரண்டு வரை, ஒரு வார காலம் நடைபெறும் என்றார்.
வரலாறு காணாத இந்த விலை ஏற்றத்தை கண்டித்து முக்கிய கட்சியான திமுக வெறும் பொதுக் கூட்டங்களையும், தெரு முனை பிரச்சாரங்களையும் நடத்துவது கண் துடைப்பாகவே இருக்கிறது.
முதல்வர் ஆட்சிக்கு வந்த ரெண்டாவது மாதத்திலேயே மினி பட்ஜெட் மாதிரி சுமார் நாலாயிரம் கோடி வரை வரிச்சுமையை மக்கள் மீது திணித்தார். இப்போது இரவோடு இரவாக இந்த விலை ஏற்றம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் பாதிக்கும் இப்படிப்பட்ட ஒரு விலை உயர்வைக் கண்டித்து திமுக வெறும் பொதுக் கூட்டங்களையும், தெரு முனைப் பிரச்சாரங்களையும் நடத்துவது ஏற்புடையது அல்ல.
இன்னும் பலமான எதிர்ப்பு அவர்களிடத்தில் இருந்து வரவேண்டும். செய்வார்களா?
எழுதியவர் கருன் *!
Similar topics
» கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.!
» அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!
» அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை!
» அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!
» அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum