மத்தளத்திற்கு இருபுறமும் இடி!
Page 1 of 1
மத்தளத்திற்கு இருபுறமும் இடி!
ராமாயணத்தில் வருவதாக, ஒரு செவிவழிக் கதை உண்டு. அது:ராமனும், சீதையும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சீதைக்குத் தாகமெடுக்கிறது. சீதை, ராமனிடம், "எனக்குத் தண்ணீர் வேண்டும்' எனக் கேட்கிறாள். ராமன், தன் வில்லில், அம்பைப் பூட்டி, கங்காதேவியை பிரார்த்தித்து, அம்பை பூமியில் விடுகிறான். அம்பானது பூமியில் குத்தி நிற்கிறது. ஆனால், நீர் வரவில்லை. ராமனுக்கு ஆச்சர்யம்! ராமன், தரையில் ஆழமாய் புதைந்துள்ள அம்பை, அசைத்து எடுக்கிறான். அந்த அம்பு, ஒரு தேரையின் மீது குத்தி நிற்கிறது.
அதிர்ச்சியடைந்த ராமன், அந்த தேரையை நோக்கி "ஏ... தேரையே! நான் தான் உன் மீது, தெரியாமல் அம்பை எய்துவிட்டேன். வலியில் துடிக்கும் நீ, ஏன் கத்தாமல் பொறுமையுடன் இருக்கிறாய்?' என்று கேட்டான். அதற்குத் தேரை, "ஹே... ராமா! ஊரில் உள்ளவர்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தினால், "ராமா! ராமா!' என்று உன்னிடம் முறையிடுவேன்.
நீயே துன்புறுத்தினால், நான் யாரிடம் முறையிடுவேன்' என்ற தாம்!மத்திய அரசும், மாநில அரசும், மாறி மாறி விலையை உயர்த்தி மக்களை வாட்டினால், மக்கள் யாரிடம் முறையிடுவர்?மத்திய அரசைப் பொறுத்தவரை, ஏதோ நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதைப்போல், மாதா மாதம் பெட்ரோல் விலையை ஏற்றுகிறது. அதனால், அனைத்துப் பொருள்களின் விலையும் உச்சாணிக்கொம்பிற்குச் செல்கின்றன. கிலோ ஆறு ரூபாய்க்கு விற்ற தக்காளி, 30 ரூபாய்! கிலோ 40 ரூபாய்க்குக் குறைந்த காய்கறி இல்லை. ஆட்டோவை கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு நூறு ரூபாய் என்பது, பத்து ரூபாய் மாதிரி.இந்நிலையில், பால் விலையையும் மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தினால்? முதல்வர் ஜெயலலிதா கூறும் விளக்கங்கள், நியாயமாகவே உள்ளன.
ஆனால், இந்த உயர்வை தாங்குகிற சக்தி இல்லையே!மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி!மத்திய தர குடும்பத்தினருக்கும் அதே கதி!முதலில் இலவசங்களை நிறுத்துங்கள். உழைக்க வாய்ப்பும், அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.நாமும் உயர்வோம்; நாடும் உயரும்!
எழுதியவர் சி.என்.முத்துஸ்வாமி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum