தி.மு.க., அரசு செய்து இருக்கலாம்!
Page 1 of 1
தி.மு.க., அரசு செய்து இருக்கலாம்!
எங்கு பார்த்தாலும் பஸ் கட்டணம், பால் விலை அதிகரித்ததைப் பற்றிய பேச்சு தான். யாருக்காக அதிகரிக்கப்பட்டது? பொதுத் துறை நிறுவனங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டதால், இச்செயல் நடந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் பதவியேற்கும் அரசுகள், மக்களை பாதிக்காதபடி கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய அரசு அப்படி செய்யவில்லை. கட்டணம் உயர்த்தினால், ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என்று, மக்களுக்கு நன்மை செய்வது போல நடித்துக் கொண்டிருந்தது.
கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின், 2011ல் தான் உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சிறிது அதிகரித்திருந்தால், இப்போதைய அரசு சிறிது உயர்த்தியிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், 10 ஆண்டுகளில் உயர்த்த வேண்டியதை, ஒரே நேரத்தில் அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு, முந்தைய அரசின் மெத்தனப் போக்கே காரணம்.அதே போல் தான் முந்தைய அரசு, பால் கொள்முதல் விலையை மட்டும், இரண்டு முறை அதிகரித்தது. ஆனால், விற்பனை விலையை அதிகரிக்கவில்லை. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து தான், இப்போதைய அரசு, விலையை அதிக
ரித்துள்ளது என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஓட்டு வங்கியை நினைவில் கொள்ளாமல், மக்களுக்காக தெளிவான முடிவை எடுக்கும் அரசு, ஆட்சியில் உள்ளது.
எழுதியவர் எம்.யுவராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum