ராஜாவுக்கு நல்ல துணை கிடைத்து விட்டது!
Page 1 of 1
ராஜாவுக்கு நல்ல துணை கிடைத்து விட்டது!
தொலைத்தொடர்பு துறைக்கு, அதிக விலை கொடுத்து, "கேபிள்' வாங்கிய ஊழல் வழக்கில், நரசிம்மராவ் ஆட்சியில், அத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது, ஊழல் வழக்கு தொடரப்பட்டது.இந்த சலுகைக்கு கைமாறாக, வெறும் ஐந்து லட்ச ரூபாய் மட்டும் பெற்றாராம் சுக்ராம்.
இது நடந்து, 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த நவ., 18 அன்று தான், சுக்ராம் குற்றவாளி என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. இவர் இன்று, 84 வயதுக்காரர். இந்த வழக்கு விசாரணை நடந்த காலத்திலேயே, அந்த தனியார் நிறுவன சேர்மன் தேவீந்தர்சிங் சவுத்ரி இறந்து விட்டார். நரசிம்மராவ் ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சி தான். அவரது அரசில் அமைச்சராக இருந்தவர் தான், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு. ஆட்சியை தக்கவைக்க, சூட்கேஸ் பார்முலாவை கண்டுபிடித்தவர் நரசிம்மராவ் தான்.ஊழல் நடந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான், சுக்ராம் குற்றவாளி என தீர்ப்பு ஆகியுள்ளது. 84 வயதான அவர், இனி "ஏசி' மருத்துவமனையில், ஐ.சி.யூ.,வில் தான் சிறைவாசம் அனுபவிப்பார். சொத்துக்களை. அவரது கொள்ளுப் பேரன்கள் விற்று, வேறு நாட்டில் முதலீடு செய்திருப்பர்.
இனி இவரை பராமரிக்கும் செலவு, மத்திய அரசுக்குத் தான்.தற்போது, திகார் ஜெயிலிலுள்ள முன்னாள் அமைச்சர் ராஜாவின், "செல்' அருகே இருப்பதால், இருவரும் பேசிக்கொள்ளலாம்.எது எப்படியோ, ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் தண்டிக்கப்பட்டது நல்ல செய்தி.
எழுதியவர் எம்.அல்லாபிச்சை,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum