இந்திய ராணுவத்தை கிண்டல் அடிக்கிறது சீனா! எங்கேய்யா நம்ம கேப்டன்?
Page 1 of 1
இந்திய ராணுவத்தை கிண்டல் அடிக்கிறது சீனா! எங்கேய்யா நம்ம கேப்டன்?
இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தைக் கேலி செய்துள்ள சீனா, “இது இவர்களை எங்கேயும் கொண்டு செல்லாது” என்றும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய 1 லட்சம் ராணுவத்தினரை புதிதாக தமது படையில் இணைத்துக் கொள்ள போவதாக அறிவித்திருந்தது. மேலும், இந்த 1 லட்சம் ராணுவத்தினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிறுத்தப் படுவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது
அந்த அறிவிப்பு குறித்தே, சீனா தனது கருத்தை கேலியாக தெரிவித்துள்ளது.
சீனா நேரடியாக இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், சைனா-டெய்லி பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பு தெரிவித்திருக்கின்றது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சைனா-டெய்லி, சீன அரசின் கருத்துக்களை ஆங்கிலத்தில் பிரதிபலிக்கும் மீடியா என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.
“இந்தியா புதிதாக ஒரு லட்சம் ராணுவத்தினரை இந்திய-சீன எல்லையில் நிறுத்துவது, தேவையில்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தும். சீனாவும் இந்திய நடவடிக்கையைப் பின்பற்றி லட்சக் கணக்கில் ராணுவத்தினரை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தினால், ராணுவ ரீதியான மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது” எனவும் கூறுகிறது சீனப் பத்திரிகை.
ராஜதந்திர மட்டத்தில் இந்த பத்திரிகைச் செய்தி கூறும் தகவல் மிகவும் சிம்பிளானது. அது, சீனா நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஆட்களை ராணுவத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப் போகின்றது!
இதில் வேடிக்கை என்னவென்றால், சீனா இந்த எல்லைப் பகுதியில் தமது ராணுவ பலத்தை அதிகரிக்கின்றது என்று கூறியே இந்தியா தனது ‘1 லட்சம் ராணுவத்தினர்’ திட்டத்தை அறிவித்திருந்தது. இப்போது சீனா இந்தியாவின் அறிவிப்பை காரணம் காட்டி மேலும் ஆட்களை எல்லையை நோக்கி கொண்டுவரப் போகின்றது.
இந்திய ராணுவம் தமது 90,000 – 100,000 ஆட்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி கொடுத்து விட்டதாக தெரிவித்திருந்தது. இந்திய ராணுவத்தின் தற்போதைய பலம், 11 லட்சம் படையினர். இவர்களில் 35,000 பேர் அதிகாரிகள்.
இந்திய ராணுவத்தின் புதிய திட்டத்துக்கு மாத்திரம், 60,000 கோடி செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லை மலைப்பிரதேசத்தையும் உள்ளடக்கி இருப்பதால், புதிதாக எடுக்கப்படவுள்ள ஆட்களை வைத்து, 1 மலைப்பகுதி தாக்குதல் படைப் பிரிவையும், 4 மலைப்பகுதி பாதுகாப்பு படைப் பிரிவுகளையும் உருவாக்க திட்டமிடுகிறது இந்திய ராணுவம்.
நன்றி விறுவிறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum