ஒரு .................க்கு அமைச்சர் பதவி.. என்ன கொடுமை இது...
Page 1 of 1
ஒரு .................க்கு அமைச்சர் பதவி.. என்ன கொடுமை இது...
வேட்டையாடுவதற்காகப் புறப்பட்ட மன்னர் வானில் மேகமூட்டமான சூழ்நிலையைக் கண்டார். மழை வருமோ என சந்தேகத்துடன் தன் அமைச்சரை அழைத்து, “இன்று மழை வருமா..?” என்று கேட்டார்.
“மன்னர் பெருமானே.. இன்று மழை பெய்யாது. என் பேச்சை நம்பி வேட்டைக்குச் செல்லுங்கள்” என்று கூறினார் அமைச்சர்.
மன்னரும் வேட்டைக்குப் புறப்பட்டார். மன்னர் காட்டை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் கழுதையை ஓட்டிக்கொண்டு ஒரு விவசாயி எதிரில் வந்தார். மன்னர் அந்த விவசாயியிடம், “இன்று மழை பெய்யுமா? என்று கேட்டார்.
“இன்று நிச்சயமாக மழை பெய்யும். உடனே நீங்கள் அரண்மனைக்குப் போய்விடுங்கள்”என்றார் விவசாயி. அவரது பேச்சைப் பொருட்படுத்தாமல் மன்னர் காட்டுக்குள் வேட்டையாடப் போனார். சிறிது நேரத்தில் கடுமையாக மழை பெய்தது. மன்னர் நன்றாக நனைந்து விட்டார்.
வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. “இன்று மழை பெய்யும் என்பது எப்படி உறுதியாகக் கூறினாய்?”என்று மன்னர் கேட்டார். “இன்று மழை பெய்யுமா, பெய்யாதா என்பது பற்றி எனக்கு தெரியாது. என் கழுதைக்குத் தான் தெரியும். கழுதை தன் காதுகளை முன் பக்கமாக நீட்டிக் கொண்டால் மழை பெய்யும் என்னும் உண்மை எனக்குத் தெரியும்.”என்றார் விவசாயி.
உடனே அரண்மனை திரும்பிய மன்னர் அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு விவசாயியின் கழுதையை அமைச்சராக்கிவிட்டார். அம்புட்டுத்தான்.
டிஸ்கி : மக்களே இது கிராமத்துப்பக்கம் எப்போதோ கேட்ட குட்டிக்கதை. இதுக்கும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
எழுதியவர் சௌந்தர்
Similar topics
» கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?
» விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........
» ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? சுப்பிரணியன் சுவாமி
» அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?
» மாற்றுவழிதான் என்ன?
» விலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே.........
» ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? சுப்பிரணியன் சுவாமி
» அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?
» மாற்றுவழிதான் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum